முழு
வளர்ச்சி அடைந்த மனிதனாகிய குழந்தை என்ற ஒரு நிலை இருக்க முடியாது.
மனிதன், குழந்தை என்ற இரண்டு சொற்களுமே ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
எனவே பரிபூரண நிலையை அடைந்த சமுதாயம் என்று ஒன்று இருபப்தற்கில்லை.
சமுதாயத்தின் இத்தகைய ஆரம்ப நிலைகளில்ருந்து மனிதன் வளர்ச்சி அடைய
வேண்டும்.அவன் வளர்ச்சியும் அடைவான்….” உனக்குள் இருக்கும் தாமரையை நீ ஏன்
மலரும் படிச் செய்யக்கூடாது ?அப்படி செய்தால் தேனீக்கள் அங்கே தாமாக வந்து
சேரும் ” என்று என்னுடைய குருநாதர் சொல்வது வழக்கம்.
பழைய சமுதாயமானாலும் புதிய சமுதாயமானாலும்
உண்மை எதற்கும் தலை வணங்காது. சமுதாயம் தான் உண்மைக்கு தலை வணங்க வேண்டும்
அல்லது அழிய வேண்டும். உண்மையை அடிப்படையாகக் கொண்டு தான் சமுதாயங்கள்
உருவாக்க வேண்டும். சமுதயாத்திருக்கு ஏற்றாபோல் உண்மை தன்னை மாற்றி
அமைத்துக்கொள்ளக் கூடாது. எங்கு உயர்ந்த உண்மைகள் நடைமுறையில் இருகின்றன்வோ
, அந்த சமுதாயம் தான் சிறந்தது. இதுவே என்னுடைய கருத்து.
சமுதாயம் உயர்ந்த உண்மைக்குத் தகுதி
உடையதாக இல்லாவிட்டால் , அதை தகுதி உடையதாக செய். எவ்வளவு விரைவில் இதை
செய்ய முடியுமோ , அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்.
—-சுவாமி விவேகானந்தர்….
No comments:
Post a Comment