
இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.
சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.
"இந்தாருங்கள் குருவே"
"அதை உடை"
"உடைத்தேன் குருவே"
"உள்ளே என்ன இருக்கிறது?"
"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"
"அதையும் உடை"
"உடைத்தேன் குருவே"
"அதனுள் என்ன பார்க்கிறாய்?"
"ஒன்றும் இல்லையே குருவே"
"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"
அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?
கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"
ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"
பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."
இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.
"இந்தாருங்கள் குருவே""
அதை உடை""
உடைத்தேன் குருவே"
"உள்ளே என்ன இருக்கிறது?"
"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"
"அதையும் உடை"
"உடைத்தேன் குருவே"
"அதனுள் என்ன பார்க்கிறாய்?"
"ஒன்றும் இல்லையே குருவே"
"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"
அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"
ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."
No comments:
Post a Comment